ஏ15 பயோனிக் சிப்செட் கொண்ட புதிய ஐபோன் எஸ்இ மற்றும் எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர்-யை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இயங்கக்கூடிய புதிய ரக ஐபோன், எஸ்இ மற்றும் எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் எஸ்இ-யில் ஏ15 பயோனிக் சிப்செட்,4.7-இன்ச் டிஸ்ப்ளே, ஐபி 67 வாட்டர் ரெசிஸ்டெண்ட் மற்றும் மூன்று வண்ணங்களைக் கொண்டுள்ளது. ஐபோன் எஸ்இ 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபியில் கிடைக்கும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 43,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியஐபேட் ஏர், எம்-1 சிப், மைய நிலை அம்சத்தைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் 12எம்பி கேமரா. 5G மற்றும் இரண்டு மடங்கு வேகமாக இயங்கக்கூடியது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த புதிய ஜபேட் ஏர் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி உருவாகப்பட்டுள்ளது.
ஐபாட் ஏர் இளஞ்சிவப்பு ஊதா, நீலம், நட்சத்திர ஒளி, விண்வெளி சாம்பல் வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஜபேட் ஏர் விலை வைஃபை மாடல்கல் ரூ.54,990 மற்றும் வைஃபை+ செல்லுலார் மாடல்கள் ரூ.68,900 இல் தொடங்குகிறது. 64ஜிபி மற்றும் 128ஜிபி வகைகளில் வழங்கப்படும் இதற்கான முன்பதிவு மார்ச்.11 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.